Tuesday, April 14, 2009

Todays News!(INDIA-TamilNadu)


சித்திரை ,2, விரோதி வருடம். புதன் ,ஏப்ரல்,15, 2009


1.விருதுநகரில் பிரசாரம் செய்கிறார் வைகோ

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதி வேட்பாளராக‌ அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் பிரசாரத்தை இன்று துவக்குகிறார். முன்னதாக அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு சென்ற வைகோவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் சிவலிங்காபுரத்தில் வைகோ தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார், சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்யும் அவர் மாலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சுவாமிநாதபுரத்தில் இன்றைய பிரசாரத்தை முடிக்கிறார்.




2.தேசிய கட்சிகளை ஆதரியுங்கள் : மன்மோகன் அழைப்பு

"" பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளை கெடுப்பவர்களாக சுயேச்சை வேட்பாளர்கள், இருக்கின்றனர். எனவே, அவர்களை ஊக்குவிக்கக் கூடாது'' என்று, பிரதமர் மன்மோன் சிங் அழைப்புவிடுத்துள்ளார். மேலும், தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய அரசியலில், மாநிலக் கட்சிகளின் பங்கேற்பு அதிகரித்துவருவது. இருப்பினும் லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளை தேர்வு செய்வதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கும் உகந்ததாக அமையும். மாநிலக் கட்சிகள் பலம் வாய்ந்தவையாக அமையுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் தற்போது, மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு நிலைநின்றுள்ளது. எனவே, மாநிலக் கட்சிகளும்,தேசிய கட்சிகளும் இணைந்து செயல்பட உருவாக்க வேண்டும் என்பதே உண்மை நிலையாக உள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க, காங்கிரசை போன்ற நாடு முழுவதும் பரவி இருக்கும் தேசிய கட்சியால் முடியும் என்பாதல், இதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.




3.திருச்செந்தூர் முருகனுக்கு அன்னாபிஷேகம்

சித்திரை மாதப்பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகனுக்கு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை மாதப்பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்தன. மேல வாசல் விநாயகர் கோவிலில் கணபதி பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் முருகனை தரிசித்தனர்.

http://www.tiruchendurmurugantemple.com/index.aspx



4.டிராவிட்டுக்கு ரூ. 8.45 கோடி


தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள ஐ.பி.எல்., "" டுவென்டி-20' தொடரில் அதிக சம்பளம் பெறுபவர், இந்திய வீரர் ராகுல் டிராவிட் தான். அவரது சம்பளம் ரூ. 8.45 கோடி. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில், இந்திய அணி கேப்டன் தோனி அதிக பட்சமாக ரூ. 6 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் தோனியை விட அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர்களான பீட்டர்சன் (பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்), பிளின்டாப் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் தலா ரூ. 7.35 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டனர். சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் "நட்சத்திர' வீரர்கள். இவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் பங்கேற்கும் அணியில் அதிக பட்ச சம்பளம் பெறும் வீரரை விட, 15 சதவீதம் அதிகமான சம்பளம் இவர்களுக்கு வழங்க வேண்டும். இதன்படி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் பீட்டர்சன் விலையை விட அதிகமாக சுமார் ரூ. 8.45 கோடி சம்பளம் பெற உள்ளார் டிராவிட். சென்னை அணி சார்பில் பிளின்டாப் ரூ. 7.35 கோடிக்கு வாங்கப்பட்ட போதும், கேப்டன் தோனி நட்சத்திர வீரர் இல்லாததால் அவருக்கு ரூ. 6 கோடி மட்டும் தான் கிடைக்கும்.



5. பிரதமர் விருந்து: அத்வானி புறக்கணிப்பு

புதுடில்லி: லோக்சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கு சிறப்பு செய்யும் விதமாக, பிரதமர் ஏற்பாடு செய்த விருந்தில் அத்வானி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. லோக்சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பதவிக் காலம் முடியும் தறுவாயில் உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் விருந்தளித்து சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருந்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "எல்லா கட்சித் தலைவர்களும் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். வருவதும், வராமலிருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்' என்றார். இடதுசாரிகள் கூறுகையில், "முதல்கட்ட தேர்தல் பணியில் இருப்பதால், கட்சித் தலைவர்கள் யாரும் டில்லியில் இல்லை. இதனால், விருந்தில் கலந்துகொள்ள முடியவில்லை' என்றனர். அத்வானி கூறுகையில், "பா.ஜ., கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், விருந்தில் பங்கேற்க முடியாது' என்றார்.




6.தனி நபர் விமர்சனங்களை அரசியலில் விரும்பவில்லை: பிரதமர்

புதுடில்லி: தனி நபர் விமர்சனங்களை அரசியலில் தாம் விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் மோதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என்றும், ஆனால் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி தம்மை பலவீனமான பிரதமர் என்று விமர்சித்து இருந்தார், இதற்கு பதலிளித்த அவர் தனிநபர் விமர்சனங்களை அரசியலில் தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்.




7.பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் சிங்கம் : ராகுல் புகழாரம்

படிண்டா : பஞ்சாப் மாநிலம் படிண்டாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பிரதமர் பலவீனமானவர் அல்ல அவர் பஞ்சாபின் சிங்கம் என மன்மோகன்சிங்குக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ஐ.மு.., கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் பஞ்சாப் சிங்கம் என்றும் இந்தியாவின் பெருமிதம் எனவும் படிண்டா தொகுதி வேட்பாளர் ரனீந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் கூறியுள்ளார்.




8.பதவி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது: அழகிரி உருக்கம்

திண்டுக்கல்: பதவி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது என தி.மு.க., தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி ‌தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் நடைபெற்ற தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, தான் மக்களுள் ஒருவனாக இருந்ததாகவும், பதவி மக்களிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், மக்கள் எழுச்சி தான் தி.மு.க., வின் எழுச்சி என்றும் அவர் தெரிவித்தார்.





This News section was gathered from popular websites and this not made by private individual.

Wednesday, March 25, 2009

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தோன்றிய பின்னணி, செயல்பாடு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஓட்டுச் சீட்டு அடிப்படையிலேயே, தேர்தல் நடைமுறைகள் துவங்கின. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த சில தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததன் அவசியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

பல கோடி மக்கள் பங்கேற்ற இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகளால் ஏற்பட்ட கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.

கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின் னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகின்றன. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்படுத் தப்பட்டது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டுச்சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது. இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு யூனிட், ஓட்டுப்பதிவு யூனிட் என இரு யூனிட்களை கொண்டது. கட்டுப்பாட்டு யூனிட் தேர்தல் அதிகாரி இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு யூனிட் வாக்காளர் ஓட்டளிக்கும் இடத்திலும் இருக்கும். இந்த இரு யூனிட்களும் ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக் கும்.

ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக் கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத் தானை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய் யும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது.

மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை.

இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப் பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத் தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற் கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும்.
'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும்.

இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித் திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும்.

ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட் பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

பிரதமர்

'பிரதமர்' என்பவர் யார்; அவருக்கு என்ன அதிகாரம்?

தேர்தலில் பெரும் பான்மை பெற்ற அரசியல் கட்சி தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். தேர்தலில் ஒரே கட்சி மெஜாரிட்டி பெறவில்லையென்றால் ஜனாதிபதி அழைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜனாதிபதியால் பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். பிரதமரின் பரிந்துரைப்படி மத்திய அமைச் சர்களை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். பிரதமரின் சம்பளத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது. பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாதவரும் பிரதமராக முடியும். ஆனால், 5 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபைக்கு தேர்வு பெற வேண்டும்.


அதிகாரம்:

* நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுமையையும் பெற்றவர் பிரதமர்.
* அமைச்சர்களின் இலாகாக்களை பகிர்ந் தளிக்கும் பொறுப்பு இவருக்குண்டு.
* அமைச்சர்கள் குறித்து சர்ச்சை எழும் போது அவர்களின் ராஜினாமாவை கோரும் அதிகாரம் பிரதமருக்குண்டு.
*அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பிரதமரே.
*மத்திய அமைச்சர்களில் அனைவரையும் விட அதிகாரம் கொண்டவர் இவரே.
* பிற துறை அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் பிரத மருக்கு உண்டு.


ஜனாதிபதியுடன் தொடர்பு:

*அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் இடையே பாலம் போல் விளங்குபவர் பிரதமர்.
* அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் ஒவ் வொன்றையும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.
* நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு நபர்களை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு உதவி செய்யும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.
* பிரதமரின் ஆலோசனைப்படி இரு சபைகளின் கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
* பிரதமரின் ஆலோசனைப்படி லோக்சபாவை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
*அமைச்சரவை ஆலோசனைப்படி நாட் டிலோ, ஒரு மாநிலத்திலோ எமர்ஜன்சியை பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்யலாம்.

தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு

தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு : பார்லியில் ஒரு கேள்வி கூட கேட்காத தங்கபாலு:


பார்லிமென்ட் நடவடிக்கைகளில் முக்கியமான நேரமாக கருதப்படுவது கேள்வி-பதில் நேரம். ஒவ்வொரு நாளும் காலை அவை கூடியதும் முதல் பணியாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த நேரத்தின்போது, எம்.பி.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர்.பல்வேறு எம்.பி.,க்களும் முன்கூட்டியே கேள்விகளை அனுப்பி அந்த கேள்விகள் பார்லிமென்ட் அலுவலக அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு அதன்பின், நட்சத்திர குறியிட்ட கேள்விகள் மற்றும் நட்சத்திர குறியிடப்படாத கேள்விகள் என்று பிரிக்கப்படும்.


நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பர். நட்சத்திர குறியில்லாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதிலளிக்கப்படும்.அந்த வகையில், தமிழகத்திலிருந்து கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டில் எத்தனை கேள்விகளை அவையில் எழுப்பினர் என்பது பற்றிய விவரம் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது சேலம் தங்கபாலு, நாகை விஜயன், பொள்ளாச்சி கிருஷ்ணன், திருப்பத்தூர் வேணுகோபால் ஆகிய எம்.பி.,க்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருந்துள்ளனர்.


ராதிகா செல்வி 2004, 2005, 2006 ஆகிய மூன்று ஆண்டுகள் வெறும் எம்.பி.,யாக இருந்துவிட்டு அமைச்சராக ஆனார். எம்.பி.,யாக இருந்த போது நான்கு கேள்விகள் கேட்டுள்ளார்.சிதம்பரம், பாலு, ராஜா, வேலு, இளங்கோவன், வேங்கடபதி, ரகுபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அமைச்சர்கள். இவர்கள் கேள்வி கேட்கமுடியாது. பதில் மட்டுமே அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில், ரயில்வே துறை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் அவையில் இணையமைச்சர் வேலு மட்டுமே முழுக்க முழுக்க பதிலளித்தார். லாலுவின் வேலை வெறுமனே பட்ஜெட் படிப்பது மட்டும் தான்.

Wednesday, July 16, 2008

தினம் ஒரு திருக்குறள்(நாள் 12)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
(12)
விளக்கம்:

உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.

தினம் ஒரு திருக்குறள்(நாள் 11)

வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
(11)
விளக்கம்:

மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.